யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

சிறிது அமைதிவேண்டும்

Published by யாத்ரீகன் under on புதன், மார்ச் 08, 2006
பேசிடும் முன் கேட்டிடு
எழுதும் முன் யோசித்திடு
செலவழித்திடும் முன் சம்பாதித்திடு
விமர்சிக்கும் முன் பொறுமை காத்திடு
பிரார்த்திக்கும் முன் மன்னித்திடு
கைவிடும் முன் முயற்சித்திடு

கற்றுக்கொள்ளவேண்டியவை பல
கற்றுக்கொண்டவற்றை
வாழ்வில் அதை பயன்படுத்தவேண்டிய பல
தேவையற்ற சஞ்சலங்கள் பல

தனிமையும், இசையுமே இப்போது தேவை, கடலலையே இசையானால் அதைவிட இனிமை எதுவுமே இல்லை....

7 மறுமொழிகள்:

பெயரில்லா சொன்னது… @ வியாழன், மார்ச் 09, 2006 3:21:00 AM

ennachunga...hope everything is alright!
hmm romba nalla paadangal...


வாழ்வில் அதை பயன்படுத்தவேண்டிய பல - exactly :)

தனிமையும், இசையும - excellent combination

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், மார்ச் 09, 2006 4:49:00 PM

@டுபுக்கு:
சில முறை சில தவறுகள் தெரிந்தே நடக்கும்போதும், அதுவும் நாம் அதை முன்பே தவறிதெரிந்துகொண்ட போதும்.. மனம் ரொம்பவே பதட்டமடையுது...

அதுவும் சில நேரங்களில் பகிர்ந்து கொள்ள நண்பர்கள் இல்லையெனும்போது மனது தனிமையையும் இசையையும் விரும்புகிறது...

உளறல் என்று விட்டுவிடாமல், உங்கள் விசாரிப்புக்கு மிகவும் நன்றி.. :-)

குழலி / Kuzhali சொன்னது… @ வியாழன், மார்ச் 09, 2006 6:13:00 PM

செந்தில் உங்களுக்கு திருமணத்திற்கான காலம் வந்துவிட்டது :-)))

Pot"tea" kadai சொன்னது… @ வியாழன், மார்ச் 09, 2006 6:17:00 PM

//கடலலையே இசையானால் அதைவிட இனிமை எதுவுமே இல்லை....//

namma case...:-)

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், மார்ச் 09, 2006 6:27:00 PM

@குழலி:
அஹா...!!!! சின்னப்பையங்க நான் :-)) அப்போயும் இந்த பதிவை மீள்பதிவு செய்யவேண்டிவருமே ..., மிக நெருங்கிய நண்பர்களின் சில செயல்கள், ப்ராக்டிகல் லைப் என்று நியாயப்படுத்தப்படும்போது வரும் கோபம்தான் அது..., நம் செயல்களுக்கும், நாம் இருக்கும் நிலைக்கும் நாமே காரணம், அதை ப்ராக்டிகல் லைப் என்று பழிபோடாதே என்று விவாதித்தபோது மனது அடைந்த குழப்பத்தின் வடிகால் இந்த பதிவு...

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், மார்ச் 09, 2006 6:29:00 PM

@பொட்டீக்கடை:
யாருக்குத்தான் பிடிக்காது :-) ஆனால் என் நண்பர்கள் பலர், தனியா உட்கார்ந்து என்னடா பண்ணுவ, ஒரு ஜாரி வேணாமானு நக்கலடிக்கத்தான் லாயக்கு..

ஒரிசாவில், பூரி கடற்கரையில் ஒரு பவுர்ணமி இரவு முழுவதும் தனியே அமர்ந்திருந்தபோது கிடைத்த மனத்திருப்தி அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை..

பெயரில்லா சொன்னது… @ செவ்வாய், ஏப்ரல் 25, 2006 10:16:00 PM

பேசிடும் முன் கேட்டிடு
எழுதும் முன் யோசித்திடு
செலவழித்திடும் முன் சம்பாதித்திடு
விமர்சிக்கும் முன் பொறுமை காத்திடு
பிரார்த்திக்கும் முன் மன்னித்திடு
கைவிடும் முன் முயற்சித்திடு

itha naan englishla engayoo kaetirukaen. itha sonnavar earunu theriuma???

கருத்துரையிடுக