யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

மனசாட்சி வேண்டாம்... அட கொஞ்சம் மூளை கூட கிடையாதா..

Published by யாத்ரீகன் under on வியாழன், மார்ச் 09, 2006

"பருப்பு வைக்குற குக்கர்ல பாம் வைக்கிறாங்க படுபாவிங்க..." இத்தகைய கமெண்டுடன் ஒரு கவர்ச்சிப்படம்

இதை வெளியிடுவது சமீபகாலத்தில் முளைத்த ஒரு மாலை தினசரி.

விற்பனையைக்கூட்ட, தவறான தகவல்களும், பரபரப்பு பொய் செய்திகளும், பாதி தலைப்புச்செய்திகளும்,அருவருக்கத்தக்க படங்கள் மட்டுமின்றி அதற்கு அருவருக்கத்தக்க கமெண்டுகளும் வெளியிட்டது போதாதா...

நாட்டில் தற்போது நிலவும் நிலையில், மக்கள் பலர் பலியான சம்பவத்தை இப்படி ஒரு அருவருக்கத்தக்க வகையில் பயன்படுத்தி விளம்பரமும், இலாபமும் தேடவேண்டுமா ?

இதற்கு யோசனை கொடுத்தவருக்கு/அதை அப்ரூவ் பண்ணியவருக்கு மனசாட்சி வேண்டாம்... அட கொஞ்சம் மூளையாவது கிடையாதா ?

ஊடகங்களின் நிலமை இவ்வளவு மோசமாக உள்ளது மிகவும் வருத்தத்திற்கு உரியது..

சிறிது அமைதிவேண்டும்

Published by யாத்ரீகன் under on புதன், மார்ச் 08, 2006
பேசிடும் முன் கேட்டிடு
எழுதும் முன் யோசித்திடு
செலவழித்திடும் முன் சம்பாதித்திடு
விமர்சிக்கும் முன் பொறுமை காத்திடு
பிரார்த்திக்கும் முன் மன்னித்திடு
கைவிடும் முன் முயற்சித்திடு

கற்றுக்கொள்ளவேண்டியவை பல
கற்றுக்கொண்டவற்றை
வாழ்வில் அதை பயன்படுத்தவேண்டிய பல
தேவையற்ற சஞ்சலங்கள் பல

தனிமையும், இசையுமே இப்போது தேவை, கடலலையே இசையானால் அதைவிட இனிமை எதுவுமே இல்லை....

தேவையில்லாத மகளிர் தினம்

Published by யாத்ரீகன் under on புதன், மார்ச் 08, 2006
பெண்களை உயர்ந்த இடத்தில் வைத்து பூஜிக்க வேண்டாம்

உயர்த்தி, வாழ்த்தி கவிதைகள் படைக்க வேண்டாம்

தனியே இட ஒதுக்கீடு என்ற பிச்சை இட வேண்டாம்

பெண்ணுக்கும் கல்வி உரிமை உண்டு என அரசாங்கமே பிரச்சாரம் பண்ண வேண்டாம்

பெண் குழந்தையை கருவிலேயே கலைக்க வேண்டாம் என பிரச்சாரம் வேண்டாம்

மகளிர் தினத்தன்று சிறப்புத்திரைப்படம் வேண்டாம்

மகளிர் தினத்தன்று தெரிந்த பெண்களை கவர பரிசுப்பொருட்கள் வேண்டாம்

மகளிர் தினமென்று தனியே கொண்டாடவே வேண்டாம்

ஆணைப்போலவே பெண்ணும் பூமியில் வாழ்ந்திட வந்த இன்னொரு உயிரினமென்று மதித்திட்டாலே போதுமே....

அதை இனிவரும் தலைமுறையிடத்தும் விதைத்தால் போதுமே..

அதிமுக Vs திமுக

Published by யாத்ரீகன் under on செவ்வாய், மார்ச் 07, 2006

ஹீம்... அதிமுகவா, திமுகவானு எல்லோரும் அடிச்சிகிறாங்க...

கம்யூனிஸ்ட், மதிமுக, பாமக, விடுதலைச்சிறுத்தைகள்னு நாம ஓட்டு போட்டுடோம்னா..

இந்த தேர்தல் கூட்டணியிலிருந்து அவர்கள் விலகி, ஒரு வித்தியாசமான தமிழகத்துக்கு தேவையான ஆண்டு அனுபவித்து, தமிழ்நாட்டை நாசமாக்கிய கட்சிகளிடமிரிந்து மாற்றத்தை கொண்டுவருவாங்கனு தோணுது...


அரசியலில் நேர்மை, கொள்கை, சுயமரியாதை என்று பேசும் எத்தனை பேர் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் கொள்கை பிடிப்பை பாராட்டுவார்கள், மதிமுகவிற்கு திமுக கூட்டணியிலிருந்தால் ஓட்டு போட்டிருப்பர் ?


ஒருவேளை அதிமுக ஆட்சி அமைந்தால், அதற்கு கடிவாளம் வைகோ போடுவதற்கு வாய்ப்பும் அமையலாம் அல்லவா ?

அல்லது தேர்தலில் அதிக இடம் வைகோ ஜெயித்தபின், மற்ற கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் அல்லவா ?

என்ன சொல்றீங்க.. ?!

இரத்ததானம் செய்வோம்

Published by யாத்ரீகன் under on திங்கள், மார்ச் 06, 2006
பாருங்கள் !!! ஒரு நல்ல காரியத்திற்கு சிறிது இரத்தம் இழப்பது பெரிய விஷயமில்லை...

பட உதவி: நன்றி அரவிந்த்

தானத்திலே சிறந்ததெது ?

Published by யாத்ரீகன் under on வியாழன், மார்ச் 02, 2006



நண்பர்: நான் ஒல்லியா இருக்கேன், நான் இரத்தம் குடுக்க மாட்டேன்பா
நான்: குண்டாயிருந்தா நிறையவும், ஒல்லியா இருந்தா கொஞ்சமும் எடுக்க மாட்டாங்க, ஆரோக்கியமா இருந்தா போதும், கொஞ்சம்தான் எடுப்பாங்க
மனசாட்சி: மவனே, தின்னு கொழுத்து போயிருக்க, உன்னை கடத்திட்டு போய் ஒரு பாரல் எடுக்கலாமேடா, அவனுக்கென்னடானா 10 பாட்டில் இரத்தம் தேவை நீங்க ரெண்டு பேரும் இந்த பேச்சா பேசுறீங்க...

நண்பர்: ஹைய்யோ, இரத்தம் குடுக்குறது, எங்க மதத்துல தப்புங்க
நான்: இதுல தப்பு என்னங்க இருக்கு, ஒருத்தருக்கு உதவிதானே பண்றோம்..
மனசாட்சி: !%^&!@!@#

நண்பர்: நிறைய இரத்தம் எடுக்க மாட்டங்கள்ல ?
நான்: இல்லீங்க நம்ம உடம்புல சராசரியா 5 முதல் 6 லிட்டர் இருக்கும் அதில் 300 மிலி மட்டும்தாங்க எடுப்பாங்க.
மனசாட்சி: இவர் அன்பே சிவம் படம் பார்க்கலையா?

நண்பர்: நீங்க இதுதான் முதல் முறையா ?
நான்: இல்லீங்க இதுக்கு முன்னாடி குடுத்திருக்குறேன்
மனசாட்சி: கிட்னியாங்க கேட்டாரு, கொஞ்சம் இரத்தம் தானே...

நண்பர்: டயாலிசிஸ்னா என்னங்க ?
இன்னொரு நண்பர்: அதுவா... உடம்புல இருக்குற இரத்தத்தை மாத்துவாங்க.
நான்: இல்லீங்க, சிறுநீரகம் வேலை செய்யலைல, அதுனால இரத்தத்தை சுத்தப்படுத்த உடம்பால முடியாது, அதுனால ஒரு மிஷின் வச்சி இரத்தத்திலருந்து அசுத்தத்தை பிரிச்சு எடுப்பாங்க..
மனசாட்சி: நமீதாவோட லேட்டஸ்ட் படம் கேளு அவனுக்கு தெரியும், ஒக்காமக்க வெளுக்கனுமடா ஒன்னை...

நண்பர்: அப்போ எதுவரைக்கும் இது பண்ணவேண்டி இருக்கும் ?
நான்: மாற்று சிறுநீரகம் பொருத்துறவரைக்கும் பண்ணவேண்டி இருக்கும். மாற்று சிறுநீரகமும் யாராலயும் குடுக்கமுடியாது, டிஸ்யூ மாட்ச் ஆகவேண்டும் அதுவும் பெற்றோருக்கு மாட்ச் ஆகும் என்று சொல்ல முடியாது, பின்னர் மருத்துவ கவுன்சில் ஒன்றின் முன் தானம் செய்பவர் ஆஜராகி மனமுவந்து குடுப்பதை தெளிவுபடுத்தவேண்டும், என பல பார்மாலிட்டீஸ் உண்டுங்க...

இதையெல்லாம் கேட்டவர் யாருனு நினைக்குறீங்க, மருத்துவமனையில் அருகிலிருந்த ஒரு கிராமத்தவர் ? இல்லை !!!, சாதாரண ஒரு பாமரர் ? இல்லை !!!,

கேட்டது, சென்ற வருடம் பொறியியல் படித்து முடித்து, தற்போது கணிப்பொறி மென்பொறியாளராய் பணி புரிகின்றார்....

ஆச்சரியமாய் இருக்கின்றதல்லவா ? எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது... படித்தவர்களே இப்படியா என்று :-(

தேவையறிந்ததும் உடனே இரத்ததானம் அளிக்க வந்த அவருடைய மனப்பான்மையை பாரட்டுகின்றேன் அதே நேரத்தில் அவருடைய அறியாமையை நினைத்து வருந்துகின்றேன்.....

இரத்ததான தகவல்கள்:
1) 18 வயதுக்குமேல், 45 கிலோவுக்கு மேலிருந்தால் போதும்
2) சராசரியாக 5 முதல் 6 லிட்டர் இரத்தம் நம் உடம்பில் உண்டு
3) யாராயிருந்தாலும், எவ்வளவு ஆரோக்கியமாயிருந்தாலும் 300 மி.லி மட்டுமே எடுப்பார்கள்
4) 24/48 மணி நேரத்துக்குள் இரத்தம் சுரந்துவிடும்
5) இரத்ததானத்துக்கு பிறகு சிறப்பு உணவுப்பழக்கமோ, சிறப்பு உணவோ தேவையில்லை
6) 48 மணி நேரத்துக்கு முன் எந்தவித மருந்தும் உட்கொண்டிருக்க கூடாது
7) கடந்த மூன்று வருடங்களில் ஜான்டிஸ் இருந்திருக்க கூடாது
8) தானம் செய்பவர்களுக்கு அனீமியா, சர்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இருக்க கூடாது

இதோடு சுத்தமான ஊசிகள் பயன்படுத்துவதை நாமும் உறுதிப்படுதிக்கொள்ளவேண்டும், காரண்ம் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவாமலிருக்க.

பயப்படாமல் இரத்ததானம் செய்திடுங்கள், ஓர் உயிரை காத்திடுவோம்..

மேலும் தகவல்களுக்கு:

1) http://members.rediff.com/bloodbank/bloodbanking.htm
2) http://www.iisc.ernet.in/medicare/bld.htm
3) http://www.google.co.in/search?hl=en&q=blood+donation+facts&meta=cr%3DcountryIN

உடலினை உறுதி செய்

Published by யாத்ரீகன் under on வியாழன், மார்ச் 02, 2006
ஒன்பது வயது குழந்தை ஒன்றுக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலை எந்த வகை இரத்தமாயினும் பரவாயில்லை, ஆனால் சில உடல்நலக்குறைபாடுகள் இல்லாமலிருக்க வேண்டும் என்று ஒரு மின்னஞ்சல் கிடைத்தவுடன்,

அதில் குறிப்பிட்டிருந்தவர்களை கூப்பிட்டு என் விருப்பத்தை சொல்லிவிட்டேன், சிறிது நேரத்தில் வந்து கூட்டிச்செல்வதாக சொன்னார்கள்.

விடாத இருமலும், சளியும் நேற்றுதான் குறைந்திருந்ததாக தோன்றியது, ஆனாலும் ஒரு சின்ன தயக்கம், மருத்துவமனை சென்றபின் இந்த உடல்நலக்குறைவை காரணம் காட்டி என்னை மறுத்துவிடுவார்களா என்று...

உடனே ஜீவிக்கு கூப்பிட்டு உறுதிசெய்துகொண்டேன், இந்த உடல்நலக்குறைவு எந்த வகையிலும் இரத்ததானம் செய்வதை பாதிக்காது என்று.. நல்லவேளை..

அங்கே சென்றபின் இந்த காரணத்தை காட்டி மறுத்திருந்தால் மனது மிகவும் கஷ்டமாயிருந்திருக்கும், இதற்காவது நம் உடல்நிலையை நல்லபடியாக வைத்திருக்கவேண்டுமென நினைத்துக்கொண்டேன்....