யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

குழந்தைகளுக்கான அறிவுத்திருவிழா

Published by யாத்ரீகன் under on திங்கள், அக்டோபர் 05, 2009
நண்பர்களே,
இந்தியாசுடர் என்பது நண்பர்கள் சிலர் சிறுதுளியாய் தொடங்கிய ஒரு தன்னார்வக்குழு. இன்று பெரும் துளியாய் வளர்ந்து, பெரும் ஆறாய் மாறி பலரை பயனடைய வைக்க முயன்றுகொண்டிருக்கிறோம். எங்களைப்பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லலாம்.

இந்த பதிவின் நோக்கம், இந்த குழுவை அறிமுகப்படுத்துவதைவிட இதன் மூலம் இன்னும் சிறிதுநாட்களில் நடக்க இருக்கும் “அறிவுத்திருவிழா” நிகழ்ச்சியை உங்களிடமும், உங்கள் நண்பர்களிடமும் பரப்புவதே.

11-அக்டோபர்-2009 சென்னையையும், அதைச்சுற்றிலும் இருக்கும் குழந்தைகள் இல்லத்திற்கான நிகழ்ச்சி. உங்களுக்கு தெரிந்த தன்னார்வக்குழுக்கள் இருப்பின் (சிறிதோ/பெரிதோ) அவர்களிடம் சொல்லி அவர்களையும் இதில் பங்கேர்க்கச்செய்வதின் மூலம் அவர்களுக்கான பயனை அடையச்செய்யலாம்.

1. போட்டிகள் (திருக்குறள்/ படம் வரைதல், வினாடிவினா, மொழிபெயர்ப்பு..)
2. எதிர்கால பாதை பற்றிய பேச்சு
3. “சாதிப்பது சாத்தியமே” - சுயமுன்னேற்ற பேச்சு








நிகழ்ச்சியில் பங்குபெறவரும் இல்லங்களில் குழந்தைகளுக்கு பயண செலவும், மதிய உணவும் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: admin@indiasudar.org

2 மறுமொழிகள்:

Roy Cherian Cherukarayil சொன்னது… @ ஞாயிறு, அக்டோபர் 25, 2009 10:35:00 PM

Senthil,
I missed out seeing this post on time...I am not sure if I could have taken my daughter to participate in one of the competitions..please mail me their web links if any

Best

ROY

Raj சொன்னது… @ செவ்வாய், டிசம்பர் 29, 2009 10:16:00 PM

anna,thanks a lot for letting me know such a well maintained web portal!

கருத்துரையிடுக